Saturday, November 21, 2009

பிறந்த நாள் பரிசு


சிறகடிக்கும் பட்டாம் பூச்சிகளை
சிறகடிக்கி மகிழ்கின்ற
காலங்கள்.
சின்னஞ் சிறு கைகளில்
பொதிகள் சுமந்தோம்
நீயும் நானும்
மாலை வகுப்பிற்காக.

சிறு சிறு மோதல்கள்
சாடும் வார்த்தைகள்
விரித்தன
இடைவெளியை
எம்மிடையே...
அந்நாட்களில்

இன்று நீ ஒரு தேசத்தில்
நான் மற்றொரு திசையில்
பிரிப்பவை தேசங்கள் மட்டுமல்ல
சமுத்திரங்களும் தான்.

எல்லைகள் கடந்து
பூத்தது நட்பு
எம்மிடையே
ஆம்!
இணையத்தினூடுதான் ...
வாடாத மலராய்
புத்துணர்வு கொள்கிறது
அனு தினமும்.

எதிரிகளாக இருந்தவர்கள்
நண்பர்களாகி,
உயிர் நண்பர்களாகி....

உணர்வுகள் மாறலாம்
உறவுகள் மாறலாம்
மனிதர்களும் மாறலாம்
என்றும் மாறாது
நட்பு ஒன்றே.

மோதல்களினால் காதல்!
தினம் திரையிலும்;
வீதிகளிலும்,
வாழ்விலும் காணலாம்.
மோதல்களினால் நட்பு
கண்டதுண்டோ!

வளர்த்தவர்கள்
நாம் இருவர்தான்!!



இன்று உன் பிறந்த நாள்
எட்டாத தூரத்திலும்,
எந்நேரமும் என்னுடனும்
இருக்கும் உனக்கு
என்ன தர
பரிசாக..!!

காலத்தாலும்
தூரத்தாலும்
பிரியாத
நட்பையும், அன்பையும்
கவிதையையும்
காணிக்கையாக்குகிறேன்.
ஏற்பாயா....!!!

-----எழில்.


உடற் கூற்றியல் காதல்




பட்டாம் பூச்சிகள்
சிற(கிறங்)கடித்து
பறக்கின்றன
வயிற்றினுள்ளே....

பூக்கள் ம(ன)ணம்
கவிழ்ந்து
மலர்கின்றன
நுரையீரல்களிலே...

நீர்வீழ்ச்சிகள் பெருக்கெடுத்து
நாடி நரம்பதிரப்
பாய்கின்றன
குருதியாய்....

பளிச்சிட்டு
மின்னும் ஒரு
வெளிச்சம்
கண்களிலே...

யாருக்கும் கேட்காத
எங்கும் ஜனனிக்காத
நாத வெள்ளம்
செவிகளிலே...

பேசியல், பவுண்டேசன், கிறீம், பௌடர்
கொடுக்க மறந்த
பிரகாசமும் பழபழப்பும்.
தானாகவே தழுவிக் கொண்ட
முகம்....




தேன் கவிழ்ததோ
பாகு பரவியதோ என
இனிமை சுரக்கும்
குரல்...

புதிதாய் ஒரு
சுவாசம் -உனது
மூச்சு.

கணனி, கடுதாசி,
கை லேஞ்சி
புத்தகம், மேசை விரிப்பு
வெற்றுச் சுவரென,
சளராது உன் பெயர் பொறித்து
வரண்டு பேனா ஒழிந்த போதும்
சோராது எழுதத் துடிக்கும்;
கைகள்....

உன் செல்லப் பெயரைத் தவிர
வேறெதையும்
சுவைக்கவும் முணுமுணுக்கவும்
வளைந்து கொடுக்காத
நா.....

கோடானுகோடி நரம்பணுக்கள்
சிலிர்த்தெழுந்து
ஆர்ப்பரித்து
செயலுற்ற போதும்,
உன் நினைவன்றி
வேறெதையும்
தேக்க மறுக்கும்
மூளை.



உன் துடிப்பைத்
தன் துடிப்பாக
மயங்கி மகிழும்
இதயம்...

எல்லாமே
இப்பொழுது
என்னுள்ளே...
பரிணமித்த மாற்றங்கள்...
இல்லை மாயங்களா?

உடற் கூற்றியலில் இல்லாத
அதிசயம்
உன்னாக நான் மாறிய
உணர்வு அது!
காதல்....

-----எழில்.

Saturday, November 14, 2009

காத்திருப்பு


காத்திருக்கிறான்…

அவளுக்காக

8.20 க்கு வர வேண்டியவள்

இன்னும் வரவில்லை

8.30 ஆகியும் ....


நகர்ந்து கொண்டிருக்கிறது

தனது பாட்டில்

தன் வேலையை

ஒழுங்காக செய்து கொண்டிருக்கும்

கடிகாரம்!


ஒவ்வொரு நொடியும்..

ஒவ்வொரு யுகமாக..

கழிகிறது.

எப்பொழுது முடியும்

இந்தக் காத்திருப்பு..



வருகையின்

தாமதத்திற்கான

காரணங்களை

தானே வகுத்தவாறே..


ஏக்கமும்

எரிச்சலும் கூடிய

இந்தக் காத்திருப்பு..


பூக்களின் அருகமைந்த

வாங்கிலே அமர்ந்து

கொண்டே….

காத்திருக்கிறான்…


நிமிர்ந்து பார்கையில்

தூரத்தில்

அதோ அவள்..


சற்று பாரமேறிய

உடலுடன் மெதுவாக

அசைந்து அசைந்து

வருகிறாள்.


அந்த

கூட்டமேந்திய

வசு வண்டி…



-----எழில்.

Friday, November 13, 2009

Welcome to my first post.

Hey everyone, Welcome to my first post.

Being told by many people that I should do it, I have been planning to start blogging for a long time. Due to lack of time the plan went getting postponed for a long time. But today I have made up my mind to start my own blog. I suppose the first thing I should introduce my self :)

I'm Ellel. I'm a medical student. I'm a modern girl. I'm just blogging to share my passion, poems, stories, about my interests, my view of life and also about whats going in my mind. I'll be writing in English as well as in my first language Tamil. Here I'll be writing in Tamil.

I am a person who is positive about every aspect of life. I'm like a phoenix rising from arizona. There are many things I like to do, to see, and to experience. I like to read, I like to write; I like to think, I like to dream; I like to talk, I like to listen. I love cooking; I like delicious food. I love to swim. I love photography. I'm good in everything. and i believe i got talents. I like to feel the music. I like flowers, birds, butterflies, sunshine, moon, rain, summer, and snow. I like to be alone, I like to be surrounded by people. I like good books and romantic movies. I like people. I like to laugh. I JUST LOVE MY FRIENDS... and looking forward to make more ...

I'm new to blogging. So I am sincerely interested in your responses & advices. Thanks in advance... I hope you'll love my blog ♥♥♥

I will get back in touch with you as soon as possible.
see you soon. Bye.